பெண்களை செல்போனில் படம் எடுத்த கோவை போலீஸ் சஸ்பெண்ட்..!

கோவை சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன் (வயது 40), இவர்சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார் .அப்போது அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தாராம். இது குறித்து கேட்டபோது ஆத்திரமடைந்த பாலமுருகன் அங்கிருந்தவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பாலமுருகனை மடக்கி பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். பாலமுருகனின் செல் போனை போலீசார் ஆய்வு செய்தபோது பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார் .இந்த நிலையில் அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் அளித்தனர். இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு பாலமுருகனை பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட்)செய்து உத்தரவிட்டார்.