கோவை ரியல் எஸ்டேட் அதிபருக்கு அரிவாள் வெட்டு..!

கோவை செல்வபுரம், குமாரபாளையம், சாஸ்தா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு ரூ5 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அதைக் கேட்ட போது ஆத்திரமடைந்த பாண்டியன் அரிவாளால்மனோகரனின் தலையில் வெட்டினார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பாண்டியனை தேடி வருகிறார்.