கோவைக்கு செந்தில்பாலாஜி உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!

மிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது.

இருப்பினும், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். 9 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும், ஒரு இடத்தில் பாஜக வேட்பாளரும் வெற்றி பெற்றனர். திமுகவினர் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடக்கும் வளர்ச்தித் திட்டக் கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தனர். அதன் பின்னர், 2021-ம் ஆண்டு இறுதியில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். அதன்படி, கோவைக்கான பொறுப்பு அமைச்சராக கரூரைச் சேர்ந்தவரும், மின்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர், கோவையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்று வளர்ச்சித் திட்டப்பணிகளை தீவிரப்படுத்தினார்.

முதல்வரை மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டினார். அதுதவிர, அரசுப் பணிகள் மட்டுமல்லாது, கோவையில் திமுக கட்சியை பலப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவை அதிக இடங்களில் வெற்றிபெற வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மற்ற பணிகளைக் கண்காணித்திடவும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நெல்லை – கே.என்.நேரு
தேனி – ஐ.பெரியசாமி
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – எ.வ.வேலு
தருமபுரி – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தென்காசி – KKSSR ராமச்சந்திரன்
கன்னியாகுமரி – தங்கம் தென்னரசு
நீலகிரி – மு.பெ.சாமிநாதன்
கிருஷ்ணகிரி – சக்கரபாணி
கோவை – செந்தில் பாலாஜி
காஞ்சிபுரம் – ஆர்.காந்தி
பெரம்பலூர் – எஸ்.எஸ்.சிவசங்கர்
நாகை – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மயிலாடுதுறை – மெய்யநாதன்