கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு இலவசமாக 2 சென்ட் வீட்டு மனை வழங்கிய எஸ்பி வேலுமணி..!

கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தா பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார் . இவர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், 90வயது பாட்டியான கமலாத்தாள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரை பற்றி தகவல்களை அறிந்த அதிமுக தலைமை நிலைய செயலாளரும்,கோவை மாவட்ட செயலளரும், தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் வீட்டு மனை இடத்தை வாங்கி கொடுத்தார்.

பாட்டி கமலாத்தா, நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு செண்ட் வீட்டுமனை இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரபதிவு செய்த நிலையில்.இடத்தின் பத்திரத்தை தற்பொழுது பாட்டி கமலாத்தாவிடம் அதிமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி ஒப்படைத்தார். அப்போது அங்கு கூடிய கிராம மக்கள் பாராட்டினர்..