கோவை வியாபாரியை தாக்கி பணம், செல்போன் வழிப்பறி – 5 பேர் கைது.!!

கோவை போத்தனூர் ,அருள் முருகன் நகரை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 30) இவர் டி .கே . மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் சுப்பிரமணியம். என்பவருடன் குறிச்சி குளக்கரை, காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த5 பேர் இவரை வழி மறித்தனர் .மது குடிக்க பணம் கேட்டனர். முகம்மது உசேன் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சேர்ந்து முகமது உசேனைத் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் பணம் ரூ 3500 ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் பகவதி நகரை சேர்ந்த முஜ்பூர் ரகுமான் என்ற முஜி (வயது 33) கோவை புதூர் சுதிர் குமார் ( வயது 30) பொள்ளாச்சி குமரன் நகர் ஹக்கீம் (வயது 30 )குனியமுத்தூர் திருவள்ளூர் நகர் முகமது ஆசிக் ( வயது 29) குனியமுத்தூர் திருவள்ளூர் நகர் சாதிக் ( வயது 30) ஆகியோரை கைது செய்தார். இவர்களிடம் இருந்து செல்போன் ,பணம் மீட்க்கப்பட்டது.