துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கோவை பெண் காவலர் சாதனை.!!

கோவை : சென்னை ஒத்திவாக்கத்தில் அகில இந்திய அளவிலான பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் கோயம்புத்தூர் இரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் ரூபாவதி 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முதல் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளார். .இவரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்..