கோவையில் மாரத்தான் ஓடிய கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையாளர்..!

கோவை விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சி விளையாட்டு போட்டி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தனியார் அமைப்புகள் மூலம் கோவையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை மராத்தான் போட்டி நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,’கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் 10 கிலோமீட்டர் தூரம் முழுவதுமாக ஓடினார்கள். இதுகுறித்து மராத்தானில் ஓடிய விளையாட்டு வீரர்கள் கூறியதாவது:- பொதுவாக போட்டிகளை தொடங்கி வைப்பதற்கு தான் முக்கிய பிரமுகர்கள் வருவார்கள். சிறிது தூரம் எங்களுடன் ஓடிவிட்டு காரில் ஏறி சென்றுவிடுவார்கள். ஆனால் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர்| முழுமையாக 10 கிலோமீட்டர் தூரம் ஓடி நிறைவு செய்தனர். இது விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும் , மகிழ்ச்சியையும் தருகிறது . என்று கூறினர்.