காதல் தோல்வியால் கல்லூரி பேராசிரியர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் குமார் ( வயது 28 ) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..காதல் தோல்வியால் அவர் தற்கொலை  செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து காருண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.