போக்கியத்திற்கு வீடு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி – போட்டோகிராபர் மீது புகார்..!

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்துவிட்டார்.இவரது மனைவி குணசுந்தரி ( வயது 54) இவர்தன் மகளுடன் வசித்து வருகிறார். கோவை அருளாச்சலா காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரதுமகன் ராஜசேகர். போட்டோகிராபர். இவர்சில நாட்களுக்கு முன்பு குணசுந்தரிக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமானார். அவர் தனக்கு சரவணம்பட்டி யில் சொந்த வீடு இருப்பதாகவும் அந்த வீட்டை போக்கியத்துக்கு தருவதாகவும் குணசுந்தரியிடம் கூறினார் .இதை நம்பிய குணசுந்தரி ராஜசேகரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வீடு போக்கியத்திற்காக ரூ 10லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ராஜசேகர் போக்கியத்திற்கு வீடு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து விளாங்குறிச்சியில் ஒரு வீட்டை போக்கியத்திற்கு தருவதாக கூறினார்.. ஆனால் அவர் எந்த வீட்டையும் போக்கியத்துக்கு கொடுக்கவில்லை. இது குறித்து குண சுந்தரி விசாரித்த போது ராஜசேகருக்கு சொந்தமானவீடு எங்கும் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து குண சுந்தரி சரவணம்பட்டிபோலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜசேகர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.