சூலூர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து.!!

குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட 21 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் சிறந்த புலனாய்வுப் பிரிவினருக்கான முதலமைச்சர் விருது பெற்ற சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் ர . மாதையன் அவர்களுக்கு சூலூர் அனைத்து வணிகர்கள் சார்பில் மலர் கிரீடம் மற்றும் சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சூலூர் வியாபாரிகள் நெல்லை காசி கே.எட்வின் தலைமையில் பாலசுப்ரமணியன், எம்.ஜி.ஸ்டாலின் இரட்டைப்பாதை சிவபெருமாள், சூலூர் நகர காங்கிரஸ் தலைவர் கண்ணன், கண்ணம்பாளையம் நகர காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி உட்பட 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..