கோவை அரசு மருத்துவமனை மற்றும் கலை கல்லூரி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மாயமானதாக அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு பந்தைய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (30). என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 22 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.