35 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாப பலி..

சென்னையில் உள்ள நேசப்பாக்கம்,பாரதி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 63 கட்டிட தொழிலாளி.)இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது உறவினர் முருகன் வீட்டுக்கு வந்தார்.அவருடன் சேர்ந்துவெள்ளலூர் ரோட்டில் உள்ள வேலன் நகரில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 35 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார் .தலையில் பலத்த காயம் ஏற்பட்டுஅதே இடத்தில் இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வினோத்குமார் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார் இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் ஜனார்த்தனன், மேனேஜர் பழனிவேல் மேஸ்திரி முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது