காருக்குள் ஜோடியாக விஷம் குடித்த தம்பதி : மனைவி மரணம் – கணவர் கவலைக்கிடம்..

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி, காஞ்சி மாநகரை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 56) இவரது மனைவி சுமதி ( வயது 52) இவர்கள் சவுரிபாளையத்தில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தனர் . அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனோகரனும் , அவரது மனைவியும் காரில் கனியூர் டோல்கேட் அருகில் வைத்து ஜோடியாக விஷம் குடித்தனர். இதை பார்த்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் சுமதி இறந்துவிட்டார். கணவர் மனோகரன் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து மகள் நக்சா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சண்முகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.