பைக் மீது கிரேன் மோதி வாலிபர் பரிதாப பலி..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சீனிவாசன் ( வயது 37) இவர் நேற்று அன்னூர் -ஓதிமலை ரோட்டில் பைக்கில்  சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கிரைன் இவரது பைக் மீது மோதியது. இதில் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக கிரேன் டிரைவரான சத்தியமங்கலம் சொக்கம்பாளையம் பக்கம் உள்ள பகுதம் பாளையத்தை சேர்ந்த ரந்தகுமார் ( வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..