ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு ஒவ்வொன்றையும் நேர்த்தியாக கோர்த்து பிரமாண்ட மாலைகளை வடிவமைத்தனர். அதிக அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டும் மாலையில் கோர்க்கப்பட்ட உலர் திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவை செதுக்கி வைக்கப்பட்ட சிலை போல் மாலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. இதில் 4 அடி உயரத்தில் 44 கிலோ எடையில் 1 மாலையும், 8 அடியில் 80 கிலோ எடையில் 2 மாலைகளும் தயாரிக்கப்பட்டு நிலக்கோட்டை பூ மார்க்கெட் கடையில் வைக்கப்பட்டிருந்த மாலையை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பூக்கடை உரிமையாளர் முருகன், ”கடந்த ஆண்டும் இதே கோயில் கொடை விழாவுக்காக இதேபோன்ற மாலையை செய்து கொடுத்தோம். இந்த ஆண்டும் அதேபோல மாலை வேண்டும் எனக் கேட்டனர். அதன்படி தங்க நகை ஆபரணம் செய்யும் நேர்த்தியில் பூமாலை செய்யும் அழகில் உலர் பழங்களால் ஆன மாலை செய்துள்ளோம். இந்த 3 மாலைகளை 4 லட்ச ரூபாய்க்கு கொடுத்துள்ளோம்” என்றார்.