கோவை பீளமேடு ,கள்ளிமேடு, வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பொன்மணி (வயது57 )இவர் நேற்று மதியம் பீளமேடு டிஸ்பென்சரி ரோட்டில் உள்ள பேன்சி ஸ்டோருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 11 செயினை பறித்தார் . இவர் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த ஆசாமியை மடிக்கி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பீளமேடு கிரி அம்மன் கோவில் முதல் வீதியைச் சேர்ந்த அர்ஜுன் ( வயது 38) என்பது தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 11 செயின் மீட்கப்பட்டது.
கோவையில் பட்டபகலில் துணிகரம்… பெண்ணிடம் 11 பவுன் செயின் பறிப்பு – மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!
