பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு..

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், பாரதி வீதியைச் சேர்ந்தவர் யுகின் மைக்கேல் ரோசாரியா (வயது 62) இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவு கடந்த 14-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படாமல் இருந்தது .நேற்று அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது .இது குறித்து அவரது மனைவி ஜோஸ்வின் சகாயமேரி வடவள்ளி போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு யுகின் மைக்கேல் ரோசாரியா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..