கோவை போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் – 6 பேர் கைது..!

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ரங்கராஜ். இவர் நேற்று வைசியாள் வீதி – ஒப்பணக்கார வீதி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள துணிக்கடைகள் முன் நின்று கொண்டு பொதுமக்களை கூவி அழைத்து இடையூறு செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் போலீஸ்காரர் ரங்கராஜை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இது குறித்து ரங்கராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீஸ்காரிடம் தகராறு செய்ததாக கரும்பு கடை சேரன் நகரை சேர்ந்த ஹக்கீம் ( வயது 37) சர்புதீன் (வயது 35 ) சுண்டக்காமுத்தூர் ஹரிரவேந்தரா (வயது 21) உக்கடம் பிலால் எஸ்டேட் அன்சர் (வயது 28) செல்வபுரம் ஆதிபதி ( வயது 24) கரும்புக்கடை,சாரமேடு முகமது அஜ்மல் உசைன் (வயது 34) ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.