வீட்டில் சோதனை நடத்திய இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று ஒரு வழக்கு தொடர்பாக குறிச்சி பிரிவு, என் .பி. இட்டேரி பகுதியில் உள்ள அசைனார் ( வயது 32 ) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த அசைனார் இன்ஸ்பெக்டர் தங்கத்தை பணி செய்ய விடாது தடுத்து , கத்தி காட்டியும், பீர் பாட்டிலை உடைத்தும் மிரட்டினாராம் .இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அசைனரை கைது செய்தனர.அபிஷேக் என்பவர் தப்பி ஓடி விட்டார். இவர்கள் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..