சூலூர் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..

கோவை அருகே வீட்டில் பெட்ரோல் ஊற்றும்போது தீப்பிடித்ததில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு,கோவை ஜூலை 23 கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கண்டன்புதூரில் ஒரு வாடகை வீட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு தினேஷ் வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 பேர் தங்கி இருந்தனர் .கடந்த 15ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் பெட்ரோல் கேனில் இருந்து பாட்டிலில் பெட்ரோல் ஊற்றும் போது அருகில் எரிந்து கொண்டிருந்த ஸ்டவ் அடுப்பில் பட்டு தீ பிடித்தது.இதில் அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு ஆகிய 3 பேரும் அதே இடத்தில் உடல் கருகி இறந்தனர் .இந்த தீபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ், வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 4பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் .சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் வீரமணி இறந்தார். இதை யடுத்து தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் ( வயது 24 ) என்பவரும்இறந்தார். இதனால் இந்ததீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோஜ் ( வயது 29 )சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இதன் மூலம் தீவிபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது..