கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி.சங்கர் ஜிவால் இன்று ஆலோசனை..!

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேற்றிரவு கோவை வந்தார். இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு  சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் சட்டம், ஒழுங்கு குறித்தும், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார் போலீஸ் கமிஷனர்கள் பாலகிருஷ்ணன் ( கோவை ) லட்சுமி ( திருப்பூர்)மற்றும் டி.ஐ.ஜி .க்கள், எஸ்.பி.க்கள் துணை கமிஷனர்கள் பங்கேற்றனர். நாளை காலை 9: -30 மணிக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் போலீசாரிடம் குறைகள் கேட்கிறார்..