அனைத்து விவசாயிகளையும் திரட்டி டெல்லியில் போராட்டம்.

அனைத்து விவசாயிகளையும் திரட்டி டெல்லியில் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார் மாநில தலைவர் அய்யாக்கண்ணு சிறப்புரை ஆற்றினார் மாநில துணைத்தலைவர் மேகராஜன் வழக்கறிஞர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் விவசாய விலைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் விவசாய உணவு பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது கோதாவரி காவிரி இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்க தலைவர்களை வருகிற 21 ஆம் தேதி சென்னைக்கு அழைப்பது என்றும் மேலும் அனைத்து விவசாயிகளையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.