விபத்தில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பக்கம் உள்ள கடத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா ( வயது 27) இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்றுநிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மூளை சாவு அடைந்தது தெரியவந்தது .இதை யடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் உறுப்பு தான சிகிச்சை மேற்கொண்டனர். அதில் இதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் கார்த்திக் ராஜாவின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்ட து..பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.