மதுபோதையில் சாக்கடையில் தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சாவு..

தர்மபுரி மாவட்டத்தைசேர்ந்தவர் முருகேசன் (வயது 46) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் -நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது குடிபோதையில் மில் அருகே உள்ள சாக்கடை வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..