குடிபோதையில் கோஷ்டி மோதல் : வாலிபருக்கு அரிவாள் வெட்டு – 4 பேர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் பழைய ஏ.டி.காலணியை சேர்ந்தவர் பழனிச்சாமி.அவரது மகன் ரங்கராஜ் (வயது 20) நேற்று குடிபோதையில் இவருக்கும், இவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .இது கோஷ்டி மோதலாக வெடித்தது.இதில் ரங்கராஜுக்கு 3 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக குன்னத்தூர் புதூரைச் சேர்ந்த கோகுல் ( வயது 24) வினோத்குமார் ( வயது 30) அரவிந்த் ( வயது 24) சந்தோஷ் (வயது 27)ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..