குடிபோதையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் – கணவர் கைது..!

கோவை டாட்டாபாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுரேஷ் ( வயது 48 )இவரது மனைவி பிரியா ( வயது 45)இவர் ஆன்லைனில் சேலை வியாபாரம் செய்து வருகிறார் இவரது கணவர் குடிப்பழக்கம் உடையவர் இவர் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்வதில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். இந்த நிலையில் மனைவி பிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரின் தொல்லை தாங்க முடியாமல் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் கணவர் சுரேஷைகாவல் நிலையத்துக்கு அழைத்து அறிவுரைகள் வழங்கி எழுதி வாங்கிவிட்டு அனுப்பினார்கள்.இந்த நிலையில் நேற்று மீண்டும் சுரேஷ் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து பிரியா காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யா சாமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த கணவர் சுரேசை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.