குடிபோதையில் கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்து கொல்ல முயற்சி – 2 பேருக்கு வலைவீச்சு.!!

கோவை :  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பக்கம் உள்ள பெரு மாள்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51) இவரது மகன் பூவரசன் (வயது 27) இவர்கள் சிங்கநல்லூர் இ .எஸ் . ஐ. மருத்துவமனை அருகே கல்லுக்குழி பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள். நேற்று இவரது மகன் பூவரசன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு மது போதையில் இருந்த இருவருக்கும், இவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.பின்னர் பூவரசன் அங்கிருந்து வெளியே வந்து விட்டார். அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நடந்து செல்லும் போது அந்த இருவரும் இவரை வழிமறித்து ஹாலோ பிளாக் செங்கலால் தலையில் அடித்தனர் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது .இது குறித்து தந்தை முருகேசன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து 2 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.