மணிப்பூர் வன்முறையை கண்டித்து சத்தியமங்கலத்தில் இ.கம்யூ ஆர்ப்பாட்டம் – அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு.!!

 ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின் சிவகுமார் பி. எல். சுந்தரம் முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷமிடப்பட்டது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சந்திரன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் திருப்பூர் குணா ஆகியோர் மணிப்பூர் வன்முறையை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் சத்தி நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஜானகி ராமசாமி, காங்கிரஸ், சிபிஐ (எம்),  விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, எஸ்டிபிஐ, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி,  அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.