திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்…

திருச்சி 51 52 53 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியின் குறைகளையும் தங்கள் சொந்த தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டம் திருச்சி ஆனைகட்டி மைதானத்தில் அமைந்துள்ள பி எஸ் எஸ் கல்யாண மண்டபத்தில் நடந்தது இதில் பட்டா மாற்றுதல் ரேஷன் கார்டுக்கு பெயர் சேர்த்தல் பாதாள சாக்கடை பணி வீடு இல்லாத மக்களுக்கு அரசு உதவியுடன் வீடு கொடுப்பது முதியோர் தொகை போன்ற எண்ணற்ற திட்டங்கள் இதில் அடங்கும். நிகழ்வில் பொன்மலை கோட்ட உதவி ஆணையர் சண்முகம் மண்டல தலைவர் துர்கா தேவி 52வது வார்டு உறுப்பினர் கலைச்செல்வி கருப்பையா 53 வது வார்டு உறுப்பினர் கலைச்செல்வி உதவி பொறியாளர் பாவாபக்ருதீன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்