ஒரே நாளில்சாலை விபத்தில்முதியவர் – மூதாட்டி சாவு…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர், வெள்ளே கவுண்டனூர்,அறிவொளி நகரை சேர்ந்தவர் மயிலன் (வயது 64)கூலி தொழிலாளி. இவர் நேற்று அங்குள்ள ராமநாதபுரம்- வெள்ளை கவுண்டனூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் மயிலன் படுகாயம் அடைந்தார் . சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகன் மாகாளி பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்கு பதிவு செய்து மாயமான லாரி டிரைவரை தேடி வருகிறார் .இதே போல காரமடையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி தாயம்மாள்( வயது 81) இவர் நேற்று காரமடை சிறுமுகை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் தாயம்மாள் படுகாயம்அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.