சர்ச்சுக்கு சென்ற முதியவர் குளத்தில் பிணமாக மீட்பு..

கோவை புலியகுளம், ஆறுமுகம் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி ( வயது 61) டெய்லர். இவர் கடந்த 6-ந் தேதி சர்ச்சுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தோணிசாமி சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவரது மனைவி தீபா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அந்தோணிசாமி கடந்த 2 ஆண்டுகளாக ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம் . இதனால் மனமுடைந்து குளத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.