கவனிக்க யாரும் இல்லாததால் விஷம் குடித்த முதியவர்கள்: மனைவி பலி – கணவர் கவலைக்கிடம்..

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 87 ) இவரது மனைவி மயிலாத்தாள் ( வயது 70) இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். இதனால் அரசம்பாளையத்தில் கந்தசாமி,மயிலாத்தாள் ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக கந்தசாமியும் அவரது மனைவி மயிலாத்தாளும் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். வயதான காலத்தில் கவனிக்க யாரும் இல்லாததால்மன அழுத்தத்தில் இருந்தனர் .இந்த நிலையில் கந்தசாமி அவரது மனைவி மயிலாத்தாள் ஆகியோர் நேற்று ஜோடியாக விஷம் குடித்தனர். வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டுபொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் மயிலாத்தாள் இறந்துவிட்டார்.அவரது கணவர் கந்தசாமி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கவனிக்க யாரும் இல்லாததால் வயதான தம்பதி விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..