சூலூரில் பீடி குடித்த மூதாட்டி தீயில் கருகி சாவு..

கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் , ஐஸ்வர்யா ரகளை சேர்ந்தவர் தாமோதரசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 78 ) இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்ததில் காயமடைந்து நடக்க முடியாமல் படுக்கையில் இருந்து வந்தார்.புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் சம்பவத்தன்று புகை பிடித்துக் கொண்டு கட்டிலில் படுத்து தூங்கி விட்டார். தீ படுக்கையில் விழுந்து அவரது உடல் முழுவதும் கருகியது . அதே இடத்தில் கண்ணம்மாள் இறந்தார். இது குறித்து அவரது மகன் சுந்தரம் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.