அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று மூதாட்டி தற்கொலை.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டி, வசந்தம் நகரை சேர்ந்தவர் அங்கப்பன் ,இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 69) இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனோரஞ்சிதம் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மூதாட்டி மனோரஞ்சிதம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மகன் பிரேம் ஆனந்த் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.