மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசன் பரிதாப பலி..

கோவை உக்கடம், கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மகன் அபுபக்கர் சித்திக் ( வயது 23) எலக்ட்ரீசியன் இவர் நேற்று இடையர்பாளையம் சிவாஜி காலனி பகுதியில்உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை அப்துல் ஹமீத் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.