சூலூர் பரம்பிக்குளம் கால்வாய் 60-வது கிலோமீட்டர் சரகம் பாலம் விரிவாக்கம்..!

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி மலையில் இருந்து பொள்ளாச்சி சாலையை இணைக்கக்கூடிய பி ஏ பி பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 60-வது கிலோமீட்டர் பாலம் விரிவாக்கம் செய்வதற்கான பணியினை சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், பிஏபி வாய்க்கால் பாசனதலைவர் வேலுச்சாமி, வரப்பட்டி ஊராட்சித் தலைவர் தர்மராஜ், கிராம நிர்வாக அலுவலர் கங்காதரன் மற்றும் பொன்னுச்சாமி அப்பகுதிவால் பொதுமக்கள் முன்னிலையில் பாலத்தை நேர்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணியை மேற்கொண்டனர் தொடர்ந்து பாலம் கட்டுமான வேலைகளும் நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு செஞ்சேரி மலையில் இருந்து பொள்ளாச்சி, பல்லடம் மெயின் ரோடு சுல்தான்பேட்டை பகுதியை இணைக்கக்கூடிய சுமார் 35 அடி அகலம் கொண்ட பாலம் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருவதற்கு இந்த பாலம் ஏதுவாக இருக்கும் மேலும் பகுதியில் இருக்கின்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த பாலம் பெரும் துணையாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்