பேக்கரி கேஷியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு – வாலிபர் கைது..!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள கரூர்கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் அஜித் ( வயது 24 ) இவர் கோவை புதூரில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை புதூர், அறிவொளி நகரில் பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ 2500 பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து அஜித் குனியமுத்தூர் போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து மதுரை தவிட்டு சந்தை பகுதியைச் சேர்ந்த பாலகுமார் மகன் நந்தகோபால் (வயது 24) என்பவரை நேற்று கைது செய்தார். இவரிடமிருந்து கத்தியும் ரூ. 2,500 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.