கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள உல்லாசம் நகரை சேர்ந்தவர் மோகன ரூபன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 40 ) கடந்த 30 – 9 – 23 அன்று இவரது வீட்டில் புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவரை கைது செய்தனர். இவர் தற்போது ஆனைமலை பக்கம் உள்ள தென் சங்கம்பாளையம் சமத்துவபுரத்தில் வசித்து வந்தார். இவரிடமிருந்து 56 பவுன் நகைகள் மீட்க்கப்பட்டது. ஏற்கனவே இவர் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் கிராந்தி குமார் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் ராமச்சந்திரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.
பிரபல கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது.!!
