கல் குழியில் தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் பரிதாப பலி..

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கராயன்புதூர் இ. எம். எஸ்.. தோட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 28) குடிப்பழக்கம்
உடையவர். இவரது மகன் விஷ்ணு (வயது 7) நேற்று தனது மகன் விஷ்ணுவுடன் கல்லாபுரத்தில் உள்ள கல் குழியில் குளிக்க சென்றார் . அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு தண்ணீரில் மூழ்கி இறந்தான். விக்னேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். முடியவில்லை. அவரும் நீரில் மூழ்கி பரிதாமாக இறந்தார் . இது குறித்து அவரது மனைவி லட்சுமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..