மகன் விபத்தில் இறந்த விரக்தியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை..

கோவைசூலூர் பக்கம் உள்ள சிந்தாமணி புதூர், செல்வ லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் குமார் . (வயது 54) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் சாலை விபத்தில் இறந்து விட்டார் . இதிலிருந்து மன அழுத்தத்துடன் குமார் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை மின் விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி சுலேகாபிவி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..