மகளீர் தங்கும் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை..

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் . இவரது மகள் ஜனனி (வயது 24 )கோவை துடியலூர் ரோட்டில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்து சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் 3 -வது மாடியில் தங்கி இருந்த அறையில் பெட் சீட்டை மின் விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விடுதி வார்டன் மகிமா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..