ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் 3 மாணவர்களுக்கு கத்தி குத்து – முன்னாள் கல்லூரி மாணவன் கைது..!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் ரோகித் ( வயது 19 ) இவர் தனியார் கல்லூரியில் படித்த போது பல்வேறு புகார் காரணமாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். அப்போது அங்கு சென்ற ரோகித் திடீரென்று தகராறு செய்து 3 மாணவர்களை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் விபத்தில் சிக்கி காயமடைந்த ரோகித் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரோகித்தை நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.