வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி..!

கோவை துடியலூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47) டெய்லர். அதே பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்ட முயற்சி செய்தார். அப்போது அவருக்கு கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவர் விஜயலட்சுமியிடம் பணம் கொடுத்தால் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய விஜயலட்சுமி கடந்த ஆண்டு முதல் பல்வேறு தவணையாக ரூ12 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பாலகிருஷ்ணன் வீடு கட்டி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது நிலம் வாங்கிய ஆவணத்தை மட்டும் கொடுத்தார். அதனை வாங்கி ஆய்வு செய்தபோது போலியாக தயாரிக்கப்பட்டஆவணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் மோசடி செய்யபட்டதை அறிந்த விஜயலட்சுமி துடியலூர் போலீசில் புகார் செய்தார் .இதன் பேரில்துடியலூர் போலீசார் பாலகிருஷ்ணன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.