முன்னாள் போலீஸ் அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி- 3 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி , வயலட் கார்டன் டி.ஜி.கே. நகரை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 65 ) இவர் சிறை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார் .இவரிடம் அதே பகுதியில் சேர்ந்த தாரா அவரது மகன் கார்த்திகேயன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் வடமதுரையில் வீடு கட்டி கொடுக்கும் சொசைட்டி தொடங்குவதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார்களரம். இதை நம்பிய உன்னிகிருஷ்ணன் அவர்களிடம் ரூ 50 லட்சம் பல தவணைகளில் வங்கி மூலமாக கொடுத்தார். அவர்கள் சொசைட்டி யும் தொடங்கவில்லை, எந்த லாபமும் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை . இந்த நிலையில் ரூ 15 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தனர். மீதி ரூ.35 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். இது குறித்து உன்னிகிருஷ்ணன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார்வயலட் கார்டன் டி .ஜி .கே நகரை சேர்ந்த செல்வராஜன் மனைவி தாரா,|அவரது மகன் கார்த்திகேயன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..