வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கல்லூரி பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி..!

நாகர்கோவில் மங்கலம் ரோட்டில் உள்ள ராமன் புதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41 )இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 12 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 20 21 -ஆம் ஆண்டு கோவையிலிருந்து மகேஸ் என்ற கோவிந்தராஜன் என்பவர் இவரது செல்போனில் தொடர்பு கொண்டு கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதிக சம்பளம் கொடுப்பதாகவும் கூறினார் . இதை நம்பிய செல்வகுமார் பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கின் மூலமாக ரூ. 4 லட்சத்து 61 ஆயிரம் அனுப்பி வைத்தார். வெளிநாட்டில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து செல்வகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் இந்த மோசடியை நடத்திய ஜனார்த்தனன், மகேஷ் என்ற கோவிந்தராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். விசாரணையில் இவர்கள் இருவரும் மேலும் 20 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது..