ஓய்வு பெற்ற வங்கி மேனேஜரிடம் ரூ.54 லட்சம் மோசடி..!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் .ஜெய சிம்மபுரத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தராஜன் ( வயது 59) இவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பீளமேடு கிளையில் மேலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் கேரளாவில் மாதா பர்னிச்சர் என்ற பெயரில் மரக்கடை நடத்தி வரும் சசிகுமார் என்பவர் தன்னுடன் வியாபாரத்தில் பணம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.என்று கூறியுள்ளார். இதை நம்பிய விவேகானந்த ராஜன் ரூ 54 லட்சத்து 7 ஆயிரத்தை சசிகுமாரின் வங்கி கணக்கு அனுப்பி வைத்தார். அவர் கூறியபடி லாபமும் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. பணம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து விவேகானந்த ராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சசிகுமார் மீது மோசடி கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகள் பதிவு செய்து தேடி வருகிறார்கள்..