ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஆயில்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது..!

ரூபாய் 1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஆயில்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பிராடு சியாஸ் கைது!
கார்த்திகேயன் வயது 38. தகப்பனார் பெயர் குமார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கொடுத்துள்ள புகார் கடந்த 2018 முதல் 2021 வருடம் வரை வியாபார நிமித்தமாக வெளிநாடுகளில் இருந்து ஆயில்களை இறக்குமதி செய்து கார்த்திகேயன் ஆகிய எனது நிறுவனத்திற்கு இறக்குமதி செய்து தருவதாக சியாஸ் என்பவன் வங்கி மூலமாகவும் ரொக்கமாகவும் ரூபாய் ஒரு கோடி 19 லட்சத்து 15 ஆயிரத்தி 345 வரை ஏமாற்றி உள்ளான். பணத்தை திருப்பி கொடுக்காமல் ஆயில்களையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தான் .இது சம்பந்தமாக குற்றவாளி இடம் கேட்டால் என்னுடைய நெட்வொர்க் மிகப்பெரிய நெட்வொர்க் சும்மா பேசி கூட இருந்தால் போட்டு தள்ளிடுவேன் என மிரட்டி உள்ளான். இது சம்பந்தமாக கார்த்திகேயன் ஆவடி காவல் ஆணையரகத்தில் சங்கரிடம் புகார் கொடுத்தார் . மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சியாஸ் நெல்லி கோடு வயது 53. செயின்ட் வின்சென்ட் காலனி நேர் அணி பாளையம் கேலிகேட் கேரளா என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்..