காரில் வந்த கொள்ளை கும்பல் கைது – துரத்தி பிடித்த கோவை போலீசார்.!!

கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று உக்கடம் ஜி .எம் . நகர். ரமலான் வீதி சந்திப்பில் நேற்று இரவுவாகன சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் வந்த ஒரு கும்பலை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கும்பல் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றது அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர், எள்ளு பட்டியை சேர்ந்த மாதவன் ( வயது 42) நீலகிரி மாவட்டம் குன்னூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பிரமணியன் ( வயது 38 )குமார், சதீஷ் ,ஜோஸ், ஸ்ரீஜித் ரித்துன் என்பது தெரிய வந்தது. இவர்கள் கோவையில் கொள்ளை அடிக்கும் நோக்த்துடன் வந்தது தெரிய வந்தது. தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்..