சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் 7 வது பிளாட் பார் மில் வந்து நின்றது. அதில் வந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் தலைமையில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது பதுங்கி இருந்த  ஒரு பயணியை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். அவன் வைத்திருந்த பையில் கமகமக்கும் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றின் எடை 6 கிலோ 500 கிராம் இந்த கஞ்சாவை மென்றால் உற்சாக கடலில் மிதக்கலாம் இந்த கஞ்சா கிடைப்பது அபூர்வம் என குற்றவாளி நிசார் வயது 41 தகப்பனார் பெயர் முகமது அரக்கல் இல்லம் வேமம் போஸ்ட் மணந்த வாடி வயநாடு மாவட்டம் கேரளம் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்தனர் .நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..