கஞ்சா கடத்தல் – கோவை கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை அவிநாசி ரோட்டில் தொட்டிபாளையம் பிரிவு அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ .300 பணமும் கைப்பற்றப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை, பெரியார் நகரைச் சேர்ந்த சிங்காரவேலன் (வயது 25) சேரன்மாநகர், அம்பேத்கர் நகரை சேர்ந்த வினோத்குமார் (வயது 20) என்பது தெரிய வந்தது. இவர்களில் வினோத்குமார் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சேரன் மாநகரில் தங்கி இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.